ADDED : ஜூலை 02, 2025 08:01 AM
ஒட்டன்சத்திர ம் : இந்திய மருத்துவ கழகம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இறகு பந்து போட்டி நடந்தது. கிளைத் தலைவர் கருப்பணன் தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செயலாளர் ஆசைத்தம்பி பரிசுகள் வழங்கினார். பட்ஸ் கல்வி குழும தாளாளர் பொன் கார்த்திக், மாநில நாட்டு நலப்பணித் திட்ட உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ், எல்.ஐ.சி., மூத்த ஆலோசகர் கனகராஜ், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு துறை முன்னாள் துணைப் பதிவாளர் டேனியல், ஓடைப்பட்டி கூட்டுறவு வங்கி செயலாளர் கணேஷ்குமார் கலந்து கொண்டனர்.
சன் சட்டில்கிளப் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.