Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல் மார்க்கெட்டில் விலை உயர்ந்த பூக்கள்

திண்டுக்கல் மார்க்கெட்டில் விலை உயர்ந்த பூக்கள்

திண்டுக்கல் மார்க்கெட்டில் விலை உயர்ந்த பூக்கள்

திண்டுக்கல் மார்க்கெட்டில் விலை உயர்ந்த பூக்கள்

ADDED : அக் 24, 2025 02:42 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்துார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு கொண்டு வரப்படும் பூக்களை வியாபாரிகள், பொதுமக்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்கின்றனர்.

இங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் வெவ்வேறு மாவட்டங்களுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியதாலும் ஐப்பசி முதல் வளர்பிறை சுபமுகூர்த்தம் என்பதாலும் அண்ணா பூ மார்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது.

நேற்று முன்தினம் கிலோ ரூ.1300க்கு விற்பனையான மல்லிகைப்பூ நேற்று 2000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், ரோஸ், சம்பங்கி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us