Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அமலாக்கத்துறை அதிகாரிக்கு 4வது முறையாக காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 4வது முறையாக காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 4வது முறையாக காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 4வது முறையாக காவல் நீட்டிப்பு

ADDED : ஜன 25, 2024 01:38 AM


Google News
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு 4 வது முறையாக பிப். 7 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம் சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறிரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2023 டிச.1ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு டிச.28 , ஜன., 11 , ஜன. 24 என மூன்று முறை காவலை நீதிமன்றம் நீட்டித்தது.

நேற்று காணொலி காட்சி மூலம் திண்டுக்கல் தலைமை நீதித்துறை நடுவர் மோகனா முன்னிலையில் அங்கித்திவாரி ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு பிப்., 7 வரை 4 வது முறையாக காவலை நீட்டித்துஉத்தரவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us