ADDED : அக் 04, 2025 04:11 AM
பழநி: பழநி வரதமாநதிஅணை உபரி நீரை பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதை கைவிட வேண்டும்.
அணையை விஸ்தரிப்பு செய்து குளங்களின் கரைகள், மதகுகள், வாய்க்கால்கள் வசதி செய்து தர வேண்டும் என கோரி, பழநி வரதமாநதி அணை நீரினை பயன்படுத்தும் விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பாக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் வந்தனர். அங்கு ஆடு மாடுகளுடன் போராட்டம் நடத்தினர்.


