ADDED : அக் 15, 2025 07:12 AM
திண்டுக்கல்; மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். குறிப்பாக தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைச் செயலர் ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி, மாவட்டத் தலைவர் முபாரக் அலி பேசினர்.


