Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குரூப் 2 தேர்வு; ஆப்சென்ட் 3708

குரூப் 2 தேர்வு; ஆப்சென்ட் 3708

குரூப் 2 தேர்வு; ஆப்சென்ட் 3708

குரூப் 2 தேர்வு; ஆப்சென்ட் 3708

ADDED : செப் 29, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வினை 12,224 பேர் எழுதிய நிலையில் 3,708 பேர் எழுதவில்லை.

டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 2, 2ஏ) பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில், குருப் 2 தேர்வெழுத 15,932 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

27 நடமாடும் குழுக்கள், 8 பறக்கும் படை, 86 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வுக்கு விண்ணப்பித்த 15,932 பேரில் 12,224 தேர்வு எழுதினர். 3,708 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு கலைக்கல்லுாரி தேர்வு மையத்தில் டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us