Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

 வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

 வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

 வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

ADDED : டிச 05, 2025 05:31 AM


Google News
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குறிஞ்சி நகரில் முன்னாள் ராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் நகை கொள்ளை போனது.

ஒட்டன்சத்திரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் வேலுமணி 63. உறவினர் வீடு விசேஷத்தில் கலந்து கொள்ள வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

நேற்று வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகை காணாமல் போனது.

ஒட்டன்சத்திரம் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுப்படி விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us