/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தடுப்பணை சிதைந்ததால் நீரின்றி வறண்ட மறவபட்டி குளம்தடுப்பணை சிதைந்ததால் நீரின்றி வறண்ட மறவபட்டி குளம்
தடுப்பணை சிதைந்ததால் நீரின்றி வறண்ட மறவபட்டி குளம்
தடுப்பணை சிதைந்ததால் நீரின்றி வறண்ட மறவபட்டி குளம்
தடுப்பணை சிதைந்ததால் நீரின்றி வறண்ட மறவபட்டி குளம்

-தடுப்பணை கட்ட வேண்டும்
கே.பெருமாள்,விவசாயி,மறவபட்டி: மறவபட்டி எல்லையாற்றில் தடுப்பணை இருக்கும் பகுதியின் ஒரு பக்கம் எரியோடு பேரூராட்சியும், மறுபக்கம் நாகையகோட்டை ஊராட்சி பகுதியாகவும் உள்ளது. இந்த தடுப்பணை சிதையாமல் இருந்தால், எல்லையாற்றில் நீர் வரும்போது எளிதாக 6 ஏக்கர் பரப்புள்ள தர்ம மடை நிரம்பி மறுகால் பாயும் வாய்ப்புள்ளது. அதிகாரிகள் கவனம் செலுத்தி தடுப்பணையை மீண்டும் கட்ட வேண்டும். தர்ம மடை குளம் நிரம்பினால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளுக்கும், உள்ளாட்சி அமைப்பின் நீர் ஆதாரங்களுக்கும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பி.சீனிவாசன், விவசாயி, மறவபட்டி: தடுப்பணையிலிருந்து தர்ம மடை குளத்திற்கு நீர் வரத்து பாதிக்கக் கூடாது என்பதற்காக 1989ல் உருவான திண்டுக்கல் கரூர் ரயில் பாதைக்கு கீழ் சிறு பாலமும் கட்டியுள்ளனர். குளத்தில் இருக்கும் மண்ணை சிலர் தொடர்ந்து அள்ளியதால் நன்றாக ஆழமாக மாறியது. அதே நேரம் மண் அள்ளுபவர்கள் கரையை பலமாக்கும் வேலையை செய்ய மாட்டார்கள். எனவே, அரசு நிர்வாகம் தடுப்பணை சீரமைப்பு பணியுடன் தர்ம மடை குளத்தின் கரையை பலமாக்கும் நடவடிக்கையையும் செய்ய வேண்டும்.
-முயற்சி செய்வோம்
கே.முத்துலட்சுமி,பேரூராட்சி தலைவர்,எரியோடு: எல்லையாற்றில் தடுப்பணை பகுதி இருக்கும் இடம் பேரூராட்சி, ஊராட்சி பகுதி எல்லைகள் பிரியும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தடுப்பணையை சீரமைக்க வலியுறுத்தி பேரூராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டர், பொதுப்பணித்துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தடுப்பணையை சீரமைத்து தர்ம மடை குளத்திற்கு நீர் வரத்து தடையின்றி கிடைக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.


