Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெண் கொலையில் ஒருவர் கைது

பெண் கொலையில் ஒருவர் கைது

பெண் கொலையில் ஒருவர் கைது

பெண் கொலையில் ஒருவர் கைது

ADDED : அக் 12, 2025 11:04 PM


Google News
திண்டுக்கல்; திண்டுக்கல் நாகல் நகர் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இங்கு அரசு பஸ் டெப்போ அருகே செப்.24ல் 53 வயதுடைய பெண் அரை நிர்வாணமான நிலையில் தலையில் கல்லைப்போட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்தார். வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஏ.வெள்ளோடுவை சேர்ந்த ஜஸ்டின் திவாகர் 45 ,என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவர், நேற்று முன்தினம் இரவு நாகல்நகர் மேம்பாலத்துக்கு கீழ் நின்று கொண்டிருந்தார்.

போலீஸ் அவரைப்பிடித்து விசாரித்ததில் பாலியல் உறவுக்கு மறுத்ததால் மதுபோதையில் அப்பெண்ணின் தலையில் கல்லை துாக்கிப்போட்டு கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us