ADDED : டிச 04, 2025 04:59 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. ஓம் சாந்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதை கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, சமூக நல அலுவலர் காலின்செல்வராணி கலந்து கொண்டனர். ரூ.93,67,115 நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். வெற்றி பெற்ற 26 பேருக்கு பரிசு , பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


