Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி, வத்தலக்குண்டில் தொடரும் மணல் கொள்ளை அதிகாரிகள் துணைபோவதால் ஜோர்

பழநி, வத்தலக்குண்டில் தொடரும் மணல் கொள்ளை அதிகாரிகள் துணைபோவதால் ஜோர்

பழநி, வத்தலக்குண்டில் தொடரும் மணல் கொள்ளை அதிகாரிகள் துணைபோவதால் ஜோர்

பழநி, வத்தலக்குண்டில் தொடரும் மணல் கொள்ளை அதிகாரிகள் துணைபோவதால் ஜோர்

ADDED : செப் 16, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: பழநி , வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை நடப்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

பழநி அம்மாபட்டி குளம், குமார சமுத்திர குளம், செங்குளம் உட்பட பல குளங்களில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட அளவை விட பல அடி ஆழத்திற்கு மண் வெட்டி கடத்தப் படுகிறது.

கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் இப்பகுதியினர்.

சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் கூறுகையில், '50க்கு மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள், 200 டிராக்டர்கள் என பெரிய அளவில் இரவு பகலாக அதிகாரிகள் துணையுடன் மண் வெட்டி கடத்தப்படுகிறது.

பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

மண் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் சீறிபாயும் வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது '' என்றார்.

மஞ்சளாற்றில் மணல் கொள்ளை: வத்தலக்குண்டு: ஜி.தும்மலப்பட்டி, கணவாய்பட்டி மஞ்சளாறு படுகையில் தொடர் மணல் கொள்ளை நடக்கிறது. இரவு நேரங்களில் 6 அடி துாரம் வரை ஆற்றின் கரைகளை குடைந்து மணல் அள்ளப்படுவதால் கரை உடைந்து விளைநிலங்கள் பாதிக்கின்றன. தென்னந்தோப்புகளில் கரைகள் உடைக்கப்பட்டு மரங்கள் ஆற்றில் சரிந்து விழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மாலை, இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளையை பொதுப்பணித்துறை,போலீசார் கண் காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us