Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பயன்படாத கழிப்பறை; துார்வாராத சாக்கடை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டு மக்கள்

பயன்படாத கழிப்பறை; துார்வாராத சாக்கடை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டு மக்கள்

பயன்படாத கழிப்பறை; துார்வாராத சாக்கடை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டு மக்கள்

பயன்படாத கழிப்பறை; துார்வாராத சாக்கடை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டு மக்கள்

ADDED : அக் 18, 2025 04:22 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: பயன்படுத்தப்படாத கழிப்பறை, துார்வாரப்படாத சாக்கடை என ஒட்டன்சத்திரம் 7வது வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் அதிகம் உள்ளன.

தும்மிச்சம்பட்டிபுதுார், கஸ்துாரி நகர், மாருதிநகர், நாயக்கனுார் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் கன்னிமார் கோயில் பகுதியில் போர்வெல் இருந்தும் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இங்கு மேல்நிலை தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடை பிரிக்கப்பட்டு சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.

நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டில் உள்ளது. ஒட்டன்சத்திரம் மலை அடிவாரத்தில் கன மழை பெய்யும் போது மழைநீரானது தும்மிச்சம் பட்டிபுதுார், கஸ்துாரிநகர் கிழக்கு பகுதியில் உள்ள ஓடை வழியாக செல்லும். இந்த ஓடை சமீபத்தில் துார்வாரப்பட்டது. தற்போது மீண்டும் செடிகள் முளைத்து காணப்படுகிறது.

ஓடை அருகே செல்லும் தார் ரோட்டில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாத சமுதாய சுகாதார வளாகம் இந்த வார்டில் உள்ளது. பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அப்படியே உள்ளது. சிலவற்றில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாயக்கனுாரில் சாக்கடையை அகலப்படுத்த வேண்டும்.

குழாய்களை சீரமையுங்க முத்துராமன், முன்னாள் கவுன்சிலர்: தும்மிச்சம்பட்டிபுதுார் பகுதியில் உள்ள குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது.கன்னிமார் கோயில், கஸ்துாரி நகர் பகுதிகளில் போர்வெல் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். பூங்கா இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஓடையில் முளைத்துள்ள செடிகளை துார்வாரி அப்படியே மேலே போட்டுவிட்டு செல்கின்றனர். மறுபடியும் ஓடைக்குள் விழுகிறது.

தெரு விளக்கு வசதி தேவை கந்தசாமி, பா.ஜ., ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஒட்டன்சத்திரம்: கஸ்துாரி நகர் பகுதியில் சாக்கடை துார்வாரப்படுவதில்லை. இதனால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும். நாயக்கனுார் ரோட்டில் தெரு விளக்கு வசதி அமைத்து தர வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் கனகராஜ், கவுன்சிலர்(தி.மு.க.,): கட்டப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தெருக்களில் உள்ள தார் ரோடுகள் அனைத்தையும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டு வழியாக செல்லும் ஓடையை துார்வாரும் பணி நடந்து வருகிறது. கன்னிமார்கோயில், கஸ்தூரி நகர் பகுதியில் போர்வெல் தண்ணீர் வீடுகளுக்கே வினியோகம் செய்யும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் குப்பை அள்ளப்பட்டு வருகிறது. சாக்கடை துார்வாரப்படுகிறது. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி உள்ளதால் சமுதாய சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனை மாற்றி நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us