/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரேஷன் கடையில் கை விரல்ரேகை பதிவுக்கு யோசனை ரேஷன் கடையில் கை விரல்ரேகை பதிவுக்கு யோசனை
ரேஷன் கடையில் கை விரல்ரேகை பதிவுக்கு யோசனை
ரேஷன் கடையில் கை விரல்ரேகை பதிவுக்கு யோசனை
ரேஷன் கடையில் கை விரல்ரேகை பதிவுக்கு யோசனை
ADDED : மார் 18, 2025 01:34 AM
ரேஷன் கடையில் கை விரல்ரேகை பதிவுக்கு யோசனை
ஈரோடு:பொது வினியோக திட்டத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி, முன்னுரிமை ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள் விபரத்தை கைவிரல் ரேகை பதிவு செய்து வரும், 31க்குள் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடியாக ரேஷன் கடைக்கு சென்றும், ரேஷன் கடை ஊழியர் வீடு தேடி வரும்போதும், சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யும்போது அங்கு தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். ரேகை பதிவு செய்யப்படாத முன்னுரிமை ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்னயோஜனா கார்டு, இணைய இணைப்பு இல்லாத மலைப்பகுதி மக்களுக்காக சிறப்பு முகாம் நடத்தி, பதிவு செய்யப்படும்.