Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பண்ணைக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 110 கோழிகள் பலி

பண்ணைக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 110 கோழிகள் பலி

பண்ணைக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 110 கோழிகள் பலி

பண்ணைக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 110 கோழிகள் பலி

ADDED : மார் 18, 2025 02:18 AM


Google News
பண்ணைக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 110 கோழிகள் பலி

கோபி:ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே குட்டிபாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம், 65; அதே பகுதியில் தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். தற்போது பண்ணையில், 1,700 பிராய்லர் கோழி வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பண்ணைக்கு சென்றபோது, கோழிகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி சென்ற கவுந்தப்பாடி போலீசார் ஆய்வு நடத்தினர். இதில் பண்ணைக்குள் தெருநாய்கள் புகுந்து கடித்ததில், 110 பிராய்லர் கோழிகள் பலியானது தெரியவந்தது. மாவட்டத்தில் தெருநாய் கடித்து, கோழிகள் பலியாகும் சம்பவம் அதிகரித்து வருவதால், கோழி வளர்ப்போர் பீதி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us