Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'ஆப்சென்ட்' ஆகும்அரசு டவுன் பஸ்

'ஆப்சென்ட்' ஆகும்அரசு டவுன் பஸ்

'ஆப்சென்ட்' ஆகும்அரசு டவுன் பஸ்

'ஆப்சென்ட்' ஆகும்அரசு டவுன் பஸ்

ADDED : மார் 19, 2025 01:42 AM


Google News
'ஆப்சென்ட்' ஆகும்அரசு டவுன் பஸ்

சென்னிமலை:சென்னிமலையில் இருந்து திருப்பூர் மாவட்டம் நத்தக்கடையூருக்கு, தினமும் காலை, மதியம், மாலை, என மூன்று நேரமும், அரசு டவுன் பஸ் நெ-௩ இயக்கப்படுகிறது. கண்டக்டர் இல்லை எனக்கூறி அடிக்கடி பஸ் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ்சை பெரிதும் நம்பியுள்ள கிராமத்து மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் காலை, 7:10 மணிக்கு நத்தக்கடையில் இருந்து சென்னிமலை வர வேண்டிய பஸ் வரவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். இந்த பஸ்சை தொடர்ந்து இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us