ADDED : ஆக 30, 2025 01:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, கொடுமுடி
தட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 45. நேற்று முன்தினம் தனது
பைக்கில், தந்தை முருகனுடன் சென்று கொண்டிருந்தார்.
முத்தையன்வலசு
பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக், ரங்கசாமி ஓட்டி
வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ரங்கசாமி, அவரது தந்தை
முருகன் ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த
முருகன், 69, உயிரிழந்தார்.
கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.


