Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்

ADDED : செப் 12, 2025 01:17 AM


Google News
ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், அபிராமி வீதியை சேர்ந்த பழனிச்சாமி மகள் மாலினி, 21; ஈரோட்டில் ஒரு துணிக்கடையில் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்தார்.

கடந்த, 9ல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார். மதியம் சம்பளம் வாங்கி வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சின்னப்பா மகள் சொர்ணாதேவி, 24; தந்தைக்கு தெரிந்த சுதர்ஷினி பராமரிப்பில் ஐந்து மாதமாக இருந்து வந்தார். கடந்த, 8ம் தேதி காலை சுதர்ஷினி பழனி சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். வீட்டில் சொர்ணாதேவி இல்லை. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us