ADDED : அக் 17, 2025 01:28 AM
பெருந்துறை, பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி கீழ்பவானி வாய்க்காலில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நேற்று மிதந்தது. தகவலின்படி சென்ற பெருந்துறை போலீசார் மீட்டனர்.
இறந்தவர் மஞ்சள் நிறக்கோடு போட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்தார். யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


