ஈரோடு :கொடுமுடி வெங்கம்பூரை சேர்ந்தவர் ஆறுமுகம், 61; கடந்த, 21ம் தேதி மதியம் வடுகபட்டி அருகே ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்றார்.
அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். அறச்சலுார் போலீசார் வழக்குப்பதிந்து, அடையாளம் தெரியாத வாகனம் குறித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.