ADDED : செப் 26, 2025 01:28 AM
காங்கேயம், வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் இளவரசன், 38; டூவீலர் மெக்கானிக் ஷாப் வைத்து நடத்தி வந்தார். திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.