Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்

கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்

கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்

கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்

ADDED : மார் 17, 2025 04:02 AM


Google News
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம்போக புன்செய் பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஜன., 10ம் தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன்படி ஐந்து சுற்றுக்களாக நீர் திறக்கப்படும். இந்நிலையில் மூன்றாம் சுற்-றுக்கு விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 81.73 அடி, நீர் இருப்பு, 16.6 டி.எம்.சி., யாக இருந்தது. அணைக்கு, 116 கன அடி நீர் வரத்தானது. கீழ்பவானி வாய்க்காலில் நான்காம் சுற்று தண்ணீர், வரும், 27ம் தேதி முதல் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us