Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

ADDED : அக் 13, 2025 05:39 AM


Google News
ஈரோடு: ஈரோடு சூளை பி.பி.கார்டனை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி மணிகண்டன். இவருடைய மகன் தஷ்வந்த், 6; ஒன்றாம் வகுப்பு மாணவன். வீட்டின் முன்பு தஷ்வந்த் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டு இருந்தார்.

சிறிது நேரம் கழித்து பெற்றோர் பார்த்தபோது காணவில்லை. பதறிப்போய் தேடியபோது வீட்டு முன்புள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்தான். ௮ அடி ஆழ தொட்டியில் ௪ அடிக்கு தண்ணீர் இருந்ததால் சிறுவன் மூழ்கி விட்டது தெரிய வந்தது. உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us