Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

ADDED : செப் 26, 2025 01:18 AM


Google News
ஈரோடு :முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் பல்வேறு விளையாட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு விடுத்து, கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், 13 வயதுக்கு ட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ.,; மாணவியருக்கு, 10 கி.மீ.,; 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ.,; மாணவியருக்கு, 15 கி.மீ., துாரம் போட்டி நடக்கும்.

இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாளை மறுநாள் (28ம் தேதி) காலை, 7:௦௦ மணிக்கு மாரத்தான் போட்டி நடத்தப்படும். 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ.,; பெண்களுக்கு, 5.கி.மீ.,; 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ.,; பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் போட்டி நடக்கிறது. கூடுதல் விபரத்திற்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவரை தொடர்பு கொள்ளலாம். இரு போட்டிகளிலும் அதிகளவில் மாணவ, மாணவியர், பொதுப்பிரிவினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us