கட்டுமான பொருள் கண்காட்சி ஈரோட்டில் 3 நாள் நடக்கிறது
கட்டுமான பொருள் கண்காட்சி ஈரோட்டில் 3 நாள் நடக்கிறது
ADDED : ஜூன் 25, 2025 01:17 AM
ஈரோடு, கட்டுமான பொருட்கள், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அலங்கரிப்பு, ஹோம் டெக்கர்ஸ் மற்றும் பர்னிச்சர்களுக்கான மாபெரும் கண்காட்சி, ஈரோடு பிசினஸ் இந்தியா எக்ஸ்சிபிஷன் நிறுவனம் சார்பில், வரும், 27ம் தேதி முதல் 29-ம் தேதி வரை, ஈரோட்டில் பெருந்துறை சாலையில் அமைந்துள்ள பரிமளம் மஹாலில் நடக்கிறது.
கட்டட மற்றும் கட்டுமான பொருட்கள் மற்றும் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான உள் மற்றும் வெளி அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், டீலர்கள், முகவர்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள், கார்பரேட் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்து வித கட்டடம் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்கள், அவற்றை அழகுபடுத்த தேவையான அலங்கார முகப்புகள் அரங்குகள், கண்காட்சியில் இடம் பெறும்.
கண்காட்சி தினமும் காலை, 10:30 மணிக்கு தொடங்கி இரவு, 8:30 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
