Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 லட்சம்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 லட்சம்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 லட்சம்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 லட்சம்

ADDED : செப் 25, 2025 02:13 AM


Google News
சென்னிமலை :சென்னிமலை முருகன் கோவிலில், நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் அருள்குமார் தலைமையில், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் சரவணன், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

நிரந்தர உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக, ரூ.19 லட்சத்து, 90 ஆயிரத்து, 2,659ரூபாய், 53.400 கிராம் தங்கம், 664 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதே போல் திருப்பணி உண்டியலில், 43 ஆயிரத்து, 314 ரூபாய் இருந்தது. மொத்தமாக, 20 லட்சத்து, 33 ஆயிரத்து, 403 ரூபாய் இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us