மூன்றாவது கன்று குட்டியையும் 'துாக்கிய' சிறுத்தையால் அச்சம்
மூன்றாவது கன்று குட்டியையும் 'துாக்கிய' சிறுத்தையால் அச்சம்
ADDED : மே 04, 2026 03:46 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் அருகே சென்டர் தொட்டியை
சேர்ந்தவர் முத்து. மூன்று மாட்டு கன்றுகளை வளர்த்தார்.
ஏற்கனவே
கடந்த மாதம் இரு கன்றுகளை சிறுத்தை துாக்கி சென்று விட்டது. மூன்றாவது
கன்று மட்டுமே எஞ்சியிருந்தது. தொழுவத்தில் நேற்று முன்தினம் மாலை
கட்டியிருந்தார். நேற்று அதிகாலை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்கவே
எழுந்து பார்த்தார். தொழுவத்தில் கட்டியிருந்த கன்று குட்டியை
காணவில்லை. தொழுவத்தை பார்த்த போது சிறுத்தையின் கால் தடம் பதிவாகி
இருந்தது. மூன்றாவது கன்று குட்டியையும் சிறுத்தை துாக்கி சென்றது,
அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க,
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
