Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூர் வனச்சரகத்தில் முதல் புலி பலியால் 'பகீர்'

அந்தியூர் வனச்சரகத்தில் முதல் புலி பலியால் 'பகீர்'

அந்தியூர் வனச்சரகத்தில் முதல் புலி பலியால் 'பகீர்'

அந்தியூர் வனச்சரகத்தில் முதல் புலி பலியால் 'பகீர்'

ADDED : செப் 20, 2025 01:37 AM


Google News
அந்தியூர், அந்தியூர் வனச்சரகம் ஈ.வெ.ரா., வன உயிரின சரணாலயமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இங்கு அடர்ந்த வனப் பகுதியில் புலிகள் வசிக்கின்றன. அந்தியூர் சரகம் கிணத்தடி பீட்டில் புலி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்படி வனத்துறையினர் நேற்று சென்றனர். இறந்து பத்து நாட்களுக்கும் மேலாகி, உடல் அழுகி சிதைந்து கிடந்தது.

இதனால் ஆணா, பெண்ணா என கண்டறிய முடியவில்லை. உடற்பாகங்களை சேகரித்து சென்னை பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். வனச்சரகத்தில் முதல் புலி பலி இதுதான். இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us