ADDED : செப் 26, 2025 01:20 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி சார்பில், துாய்மையே சேவை திட்டத்தில், 'ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒருங்கிணைந்து துாய்மை பணி மேற்கொள்வோம்' நிகழ்ச்சி நடந்தது.
இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், வழிபாட்டு தலங்கள், குளம், குட்டை போன்ற நீர்நிலை, பொதுக்கழிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ரங்கம்பாளையத்தில் நடந்த துாய்மை பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.