ADDED : அக் 10, 2025 12:57 AM
ஈரோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ் ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தேர்வு நாளை (11ல்) ஈரோடு மாவட்டத்தில், 32 மையங்களில் நடக்கிறது.
இதில், 10,309 பேர் எழுதவுள்ளனர். சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 பேர் (50 சதவீதம் அரசு பள்ளி) தேர்வு செய்யப்பட்டு, மாதம், 1,500 ரூபாய் என இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


