ADDED : செப் 19, 2025 02:38 AM
சென்னிமலை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி, அடையாள அட்டை வழங்கும் விழா, சென்னிமலையில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட, 25 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 3.03 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி கடனுதவி வழங்கினார். சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரபு, நகர செயலாளர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


