ADDED : செப் 26, 2025 01:26 AM
பவானி : பவானி அடுத்த தளாவாய்பேட்டை, கவுண்டன்புதுாரில், ஆப்பக்கூடல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர்.
வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் ஓடி விட்டாராம். சோதனை செய்ததில் மூன்றரை யூனிட் மணல் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து, உரிமையாளர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.