ADDED : அக் 12, 2025 02:01 AM
ஈரோடு:ஈரோடு பெரியவலசை சேர்ந்த முருகேசன் மனைவி லட்சுமி, 40; இவரின் மருமகன் சபரி கிரீசன், 34; இவருடன் பெரியவலசு முத்து மாரியம்மன் கோவில் முன்புறம் நடந்து சென்றார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் திருமலை வீதி லோகநாதன் மகன் பிரவீன் குமார், 25, வந்தார். இவருக்கும் சபரிகிரீசனுக்கும் முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில் சபரிகிரீசனை பிரவீண்குமார் தாக்க முயன்றுள்ளார். இதை தடுத்த லட்சுமிக்கு அடி விழுந்தது. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் பிரவீண்குமாரை கைது செய்தனர்.


