யானை தாக்கியதில் காயமடைந்தவர் சாவு
யானை தாக்கியதில் காயமடைந்தவர் சாவு
யானை தாக்கியதில் காயமடைந்தவர் சாவு
ADDED : அக் 21, 2025 01:17 AM
அந்தியூர், பர்கூர்மலை தாமரைக்கரை ஒந்தனை ஒட்டனுார் மலை கிராமத்தை சேர்ந்த விவசாயி மூர்த்தி, 37; கடந்த, 11ம் தேதி வனப்பகுதியோரம் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
ஈரோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


