/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் ஓடும் காரில் தீ பேன்சி கடைக்காரர் தப்பினார் ஈரோட்டில் ஓடும் காரில் தீ பேன்சி கடைக்காரர் தப்பினார்
ஈரோட்டில் ஓடும் காரில் தீ பேன்சி கடைக்காரர் தப்பினார்
ஈரோட்டில் ஓடும் காரில் தீ பேன்சி கடைக்காரர் தப்பினார்
ஈரோட்டில் ஓடும் காரில் தீ பேன்சி கடைக்காரர் தப்பினார்
ADDED : மார் 18, 2025 02:15 AM
ஈரோட்டில் ஓடும் காரில் தீ பேன்சி கடைக்காரர் தப்பினார்
ஈரோடு:ஈரோடு, சூளை பகுதியில் பேன்சி கடை வைத்திருப்பவர் சிவக்குமார், 45; கிவிட் காரில் சூளையில் இருந்து வீரப்பன்சத்திரம் நோக்கி நேற்றிரவு, 9:00 மணியளவில் சென்றார். ஒரு வளைவில் காரை திருப்பியபோது பேனட் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த சிவக்குமார் உடனடியாக காரை நிறுத்தி இறங்கினார். அதேசமயம் கார் தீப்பிடித்து எரிய துவங்கியது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து குடம், பக்கெட்டுகளில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். மேலும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். விபத்தில் பேனட் பகுதி எரிந்தது.