/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ த.மா.கா., சார்பில் 'நீட்' கையேடு வழங்கல் த.மா.கா., சார்பில் 'நீட்' கையேடு வழங்கல்
த.மா.கா., சார்பில் 'நீட்' கையேடு வழங்கல்
த.மா.கா., சார்பில் 'நீட்' கையேடு வழங்கல்
த.மா.கா., சார்பில் 'நீட்' கையேடு வழங்கல்
ADDED : ஜன 08, 2025 02:46 AM
ஈரோடு, :த.மா.கா., சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' கையேடு வழங்கப்பட்டது. ஈரோட்டில் 'நீட்' கையேட்டை வழங்கி, த.மா.கா., பொதுச் செயலாளர் யுவராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:
த.மா.கா., சார்பில் கடந்த நான்கு ஆண்டாக, 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, 4,000 ரூபாய் மதிப்பிலான இலவச 'நீட்'' கையேடு வழங்கி வருகிறோம்.
இந்தாண்டு ஈரோடு பகுதியில் மருத்துவம் படிக்க ஆர்வமுள்ள, 120 மாணவர்களை தேர்வு செய்து, 'நீட்' கையேடு வழங்கியுள்ளோம்.
அவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசு சார்பில் இலவசமாக 'நீட்' தேர்வு பயிற்சி நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.


