Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபியில் வரும் 24ல் சிறப்பு கல்வி கடன் மேளா

கோபியில் வரும் 24ல் சிறப்பு கல்வி கடன் மேளா

கோபியில் வரும் 24ல் சிறப்பு கல்வி கடன் மேளா

கோபியில் வரும் 24ல் சிறப்பு கல்வி கடன் மேளா

ADDED : அக் 23, 2025 01:32 AM


Google News
ஈரோடு, ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் சார்பில், நாளை (24) காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது.

புதிதாக கல்லுாரியில் சேரும் மாணவ, மாணவியர், ஏற்கனவே கல்லுாரிகளில் படிப்போர், பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால், வங்கிகள் மூலம் அவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது. உயர்கல்வியை மாணவர்கள் தொடர, கல்விக்கடன் எளிதில் கிடைக்க, கல்விக்கடன் மேளா நடத்தப்படுகிறது. மாணவ, மாணவியர், பெற்றோர்களின் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல், பான் கார்டு, ஜாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருவாய் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ, மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.

கலந்தாய்வு கடிதம், நுழைவு தேர்வு முடிவுகள், கல்லுாரி ஒப்புதல் கடிதம், கல்லுாரி சேர்க்கை கடிதம், கல்லுாரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று, உறுதிமொழி சான்று போன்றவற்றை, https://pmvidyalaxmi.co.in என்ற இணைய தளம் மூலம் வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us