/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பர்கூர்மலை கிராம பள்ளியில் சமையலர் இல்லை வீட்டு உணவை கொண்டு வரும் மாணவர்கள் பர்கூர்மலை கிராம பள்ளியில் சமையலர் இல்லை வீட்டு உணவை கொண்டு வரும் மாணவர்கள்
பர்கூர்மலை கிராம பள்ளியில் சமையலர் இல்லை வீட்டு உணவை கொண்டு வரும் மாணவர்கள்
பர்கூர்மலை கிராம பள்ளியில் சமையலர் இல்லை வீட்டு உணவை கொண்டு வரும் மாணவர்கள்
பர்கூர்மலை கிராம பள்ளியில் சமையலர் இல்லை வீட்டு உணவை கொண்டு வரும் மாணவர்கள்
ADDED : செப் 24, 2025 01:18 AM
அந்தியூர் :அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில், தமிழக-கர்நாடக எல்லையில், வேலம்பட்டி கிராமம் அடர்ந்த வனத்தில் அமைந்துள்ளது. இங்கு, 170 லிங்காயத்து மக்களும், 15 வன்னியர் மக்களும் வசிக்கின்றனர்.
இவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, 2016ல் துவக்கப்பள்ளிக்கு கட்டடம் கட்டி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த பெண்மணி ராஜு தனக்கு சொந்தமான, ௨௧ சென்ட் நிலத்தை தானமாக அளித்தார். அதில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பள்ளியில், 10 மாணவர்கள், 9 மாணவியர் பயில்கின்றனர்.
இவர்களுக்கு சத்துணவு வழங்கும் நோக்கில், தற்காலிக சமையலராக, பள்ளிக்கு இடம் கொடுத்த ராஜு, 2017ல் நியமிக்கப்பட்டார். பள்ளியின் சத்துணவு பொறுப்பாளரான குபேந்திரன், ௧,௦௦௦ ரூபாயை ஊதியமாக ராஜுக்கு வழங்கியுள்ளார். போதுமானதாக இல்லாததால் ஊதியத்தை உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இரு மாதங்களுக்கு முன் அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் பி,டி.ஓ., சரவணனிடமும், ராஜு மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவினர், சம்பளத்தை அதிகப்படுத்தி வழங்க வேண்டுகோள் விடுத்தனர்.
யூனியன் அலுவலகம் மூலம், ௨,௦௦௦ ரூபாய் வழங்குவதாக பி.டி.ஓ., உறுதியளித்துள்ளார்.ஆனால் யூனியன் அலுவலகத்திலிருந்து சம்பளம் வழங்கவில்லை. இதனால் உணவு சமைக்க, 15 நாட்களாக ராஜு செல்லவில்லை. இதனால் மாணவ, மாணவியர், வீட்டில் இருந்து உணவு கொண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பி.டி.ஓ., சரவணன் கூறியதாவது: அடர்ந்த வனப்பகுதியில் வேலம்பட்டி பள்ளி உள்ளதால் டெபுடேஷனில் செல்ல யாரும் முன் வரவில்லை. தற்காலிக சமையலர் ராஜுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் தர முடியாத சூழல். இன்னும் இரண்டு நாட்களில், சமையலரிடம் பேசி சம்பளம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.