Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

ADDED : அக் 14, 2025 01:58 AM


Google News
ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் முனிசிபல் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி பத்மா, 53; டெய்லர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 2016ல் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் நடந்த பிரச்னையில் பத்மாவுக்கு தொடர்பு இருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு நேற்று காலை வந்தார். வளாகத்துக்கு வெளியே, 11:20 மணியளவில் நின்றிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us