ADDED : அக் 19, 2025 02:26 AM
ஈரோடு: ஈரோடு சின்னியம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 34, கூலி தொழிலாளி. திருமணமாகி குழந்தை உள்ளது.
ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். சிறுமி அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் அசோக்குமாரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


