ADDED : ஜூன் 15, 2024 06:34 AM
சங்கராபுரம்: பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. விழாவில், பூட்டை, செம்பராம்பட்டு, பாவளம் உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.