Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கராபுரத்தில் ஜமாபந்தி துவக்கம்

சங்கராபுரத்தில் ஜமாபந்தி துவக்கம்

சங்கராபுரத்தில் ஜமாபந்தி துவக்கம்

சங்கராபுரத்தில் ஜமாபந்தி துவக்கம்

ADDED : ஜூன் 13, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கியது.

வருவாய் தீர்வாய அதிகாரி லுார்துசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ,சமுக பாதுகாபட்பு திட்ட தனி தாசில்தார் சத்தியநாராயணன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலை வரவேற்றார்.

லுார்துசாமி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் பட்டா மாற்றம்,முதியோர் உதவித் தொகை,இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொது மக்களிடமிருந்து 75 மனுக்கள் பெறப்பட்டது.

முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தனவேல்,மண்டல துணை தாசில்தார் ராமசாமி,தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், தலைமை நில அளவர் பால் தினகரன்,வருவாய் ஆய்வாளர் கல்யாணி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us