ADDED : ஜூன் 16, 2024 06:46 AM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அடுத்த பொரசக்குறிச்சியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பாபு, 42; இவரது மனைவி பரிமளா. இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். கடந்த மே மாதம் 9ம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது கோபத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பாபு, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி பரிமளா அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.