ADDED : ஜூலை 09, 2024 04:05 AM

கள்ளக்குறிச்சி : சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்,49; கடந்த 22ம் தேதி தச்சூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல சாராய வழக்குகள் உள்ளதால், அவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில் பழனிவேலுவை, தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள பழனிவேலுவிடம் கள்ளக்குறிச்சி போலீசார் வழங்கினர்.