Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்

உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்

உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்

உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்

ADDED : ஜூன் 24, 2025 03:20 AM


Google News
Latest Tamil News
சங்கராபுரம் : சங்கராபுரம் வேளாண் துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட நிகழ்ச்சி நடந்தது.

புத்திராம்பட்டு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் கலையரசி பெரியசாமி தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். வேளாண் துறை திட்டங்கள், மானிய விபரங்கள், இயற்கை விவசாயம், உழவன் செயலியின் பயன்பாடுகள், மண்வள மேம்பாடு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், சொட்டுநீர் பாசன திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தோட்டக்கலை அலுவலர் ேஷாபனா தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்து பேசினார்.

உதவி வேளாண் அலுவலர் அப்பாஸ், உதவி தோட்டக்கலை அலுவலர் ரகுநாதன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார், பயிர் காப்பீட்டு அலுவலர் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர். வேளாண்மை துறை மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us