ADDED : அக் 15, 2025 02:00 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் அஷ்டமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
உற்சவர் கிருஷ்ணருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்கள் பாடி தரிசனம் செய்தனர்.


