Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

ADDED : ஜூன் 20, 2025 03:57 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்,45; விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சிவக்குமார் மகன் விக்னேஷ்,25; என்பவருக்கும், நிலப்பிரச்னையில் முன் விரோதம் உள்ளது.

கடந்த 16ம் தேதி காலை 8:30 மணிக்கு நீலமங்கலம் தனியார் பள்ளி பின்புறம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தமிழரசனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us