Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சிறப்பாசிரியர்களுக்கு கணினி பயிற்சி

சிறப்பாசிரியர்களுக்கு கணினி பயிற்சி

சிறப்பாசிரியர்களுக்கு கணினி பயிற்சி

சிறப்பாசிரியர்களுக்கு கணினி பயிற்சி

ADDED : ஜன 28, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பாடசாலை சிறப்புப்பள்ளி வளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

மனவளர்ச்சி குன்றிய சிறார்கள் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறார்கள்களுக்கு பேச்சுப்பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்கள், பேச்சு பயிற்சியாளர்களுக்கு ஆவாஸ் எனப்படும் மென்பொருள் கொண்ட தொடுவதால் பொருள் சொல்லும் சிறப்பு கணினி செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி தலைமையில், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் முன்னிலையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாமந்துார் கருணை இல்லம், ஆலத்துார் புனித அன்னாள், மாடூர் அனைக்கும் கரங்கள், மந்தைவெளி பாடசாலை உள்ளிட்ட சிறப்புப்பள்ளிகளை சேர்ந்த சிறப்பாசிரியர்கள் மற்றும் பேச்சுப்பயிற்சியாளர்கள் 12 பேர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us