Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூட்டுறவுத்துறை பணியாளர் குறைதீர்வு முகாம்

கூட்டுறவுத்துறை பணியாளர் குறைதீர்வு முகாம்

கூட்டுறவுத்துறை பணியாளர் குறைதீர்வு முகாம்

கூட்டுறவுத்துறை பணியாளர் குறைதீர்வு முகாம்

ADDED : செப் 13, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை பணியாளர் குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

சரக துணைப்பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன் முன்னிலை வகித்தனர். முகாமில், கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணியில் உள்ள சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களிடம் இருந்து 11 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டுறவு சங்கங்களின் விதிகளுக்கு உட்பட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்தார். நிகழ்ச்சியில், இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், கள அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us