/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
ADDED : ஜூன் 19, 2025 07:20 AM
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரகண்டநல்லுார் அடுத்த தேவனுார், புது நகரில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன்,50; சாலை பணியாளர். கடந்த, 13ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் தங்கி படிக்கும் மகன்களை பார்க்க மனைவியுடன் சென்றார்.
நேற்று காலை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் அளித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 3 சவரன் நகை, 150 கிராம் வெள்ளி, 50 ஆயிரம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.