ADDED : மே 29, 2025 11:40 PM
கள்ளக்குறிச்சி: மாயமான கூலி தொழிலாளியை கள்ளக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரை சேர்ந்தவர் ஸ்டீபன்,40; கூலி தொழிலாளி.
இவர் கடந்த சில நாட்களாக பெங்களுருவில் வேலை செய்து வந்தார். அங்கு கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு வந்துள்ளார்.
ஆனால் அவர் வீட்டிற்கு வராததையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த அவரது மனைவி எஸ்தர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.